திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் சித்திரைத் திருத்தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
May 13 2018 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் சித்திரைத் திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், நம்பெருமாள் கருடவாகனம், யானை வாகனம், தங்கக்குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ரங்கா ரங்கா என பக்தி கோஷமிட்டவாறு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
முன்னதாக நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெரிய திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்திரைத் தேர்த்திருவிழாவில் நம்பெருமாளை வழிபட்டால், திருமணத்தடை நீங்குவதோடு, சகலதோஷங்களும் நீங்கும் என்ற ஐதீகம் நிலவுவதால், பெருந்திரளான பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.