சித்திரைத் திருவிழா - கோயில்களில் சிறப்பு வழிபாடு : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
May 14 2018 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சித்திரைத் திருவிழாவையொட்டி, கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவலாங்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயத்தில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர். பால்குட ஊர்வலம் 16 அடி நிள அலகு காவடிகள் மற்றும் கரகம் மங்கள வாத்தியங்களுடன் புறப்பட்டு திருக்கோவிலை வந்தடைந்தது. பின்னர், மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சிவன் கோயிலில், சித்திரை மாத பிரதோஷம் நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நந்திக்கு பால், வெண்ணெய், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.