உலகப்பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை நிதி ஒதுக்காததால் பக்தர்கள் கடும் அதிருப்தி - விழாவுக்கான செலவுகளை ஏற்று 24 லட்சம் ரூபாயை ஒதுக்கிய வேளாக்குறிச்சி ஆதினம்
May 20 2018 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப்பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை எந்தவித நிதியும் ஒதுக்காமல் புறக்கணித்துள்ள சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இவ்விழாவிற்கான அனைத்து செலவுகளையும் வேளாக்குறிச்சி ஆதினம் ஏற்று, 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், கோயில்களின் கோயில் என அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயம், சைவ சமய குறவர்களால் பாடப்பெற்ற புராதன சிறப்பு வாய்ந்த ஆலயமாகும். உலக அளவில் திருவாரூருக்கு பெருமை சேர்ப்பது ஆழித்தேர். மரப்பீடத்தின் வடிவமைப்பு, கலைநயமிக்க சிற்பங்கள், ஆழித்தேரின் சிறப்புகள். இத்தகைய சிறப்புகளை கொண்ட ஆழித்தேரோட்டம், இந்து சமய ஆகமவிதியின்படி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திர தினமான வரும் 27ம் தேதி நடந்திருக்க வேண்டும். ஆனால், தேரோட்ட விழாவிற்கான நிதியினை, இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்க முன்வராமல் புறக்கணித்ததால் தேரோட்ட விழாவை நடத்த முடியாத நிலை உருவானது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆழித்தேரோட்ட விழாவிற்கான அனைத்து செலவுகளையும், வேளாக்குறிச்சி ஆதினம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்து, அதற்கு 24 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தேரை அலங்கரிக்கப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த ஒரு மாதகாலமாக இரவு-பகலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் 27ம் தேதி காலை ஆழித்தேரோட்டம் நடைபெறவுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.