சென்னை நங்கநல்லூரில் உலக நன்மை மற்றும் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
May 21 2018 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நங்கநல்லூரில், உலக நன்மை மற்றும் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில், ஸ்ரீயபதி பக்த ஆலயத்தின் சார்பில், மழை பெய்ய வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும், "நாமே சொல்வோம் நாமங்களே" என்ற தலைப்பில் சிறப்பு யாகம் நடைபெற்றது. நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த யாகத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு யாகங்கள் நடத்தினர்.