திருப்பூரில் கருப்பணசாமி கோயிலில் பல்லி சகுனத்தின்படி பொங்கல் விழா : 2 டன் இரும்பு அரிவாளை காணிக்கையாக வழங்கிய பக்தர்
May 21 2018 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அருகே கருப்பண்ணசாமி கோயிலுக்கு, பக்தர் ஒருவர் 2 டன் எடையுள்ள இரும்பு அரிவாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். இதனை, கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து வணங்கிச் செல்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூர், கஸ்ப பழையகோட்டையில் உள்ள மூடுபாறை கருபண்ணசாமி கோயில் நாடார் சமூகத்தின் குலதெய்வமாகத் திகழ்கிறது. இக்கோயிலில் முக்கிய விழாவாக பெரிய பொங்கல் விழா நடைபெறுகிறது. இதற்கு சாமியிடம் பல்லி சகுனம் கேட்பது வழக்கமாக உள்ளது. பல்லி சகுனம் சொன்னால் மட்டுமே பொங்கல் வைப்பது மரபாகும். இதையொட்டி சுமார் 31 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த ஆண்டு பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
இத்தகைய சிறப்புகள் கொண்டுள்ள இக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர் ஒருவர், தான் விபத்தில் இருந்து குணமடைந்ததை அடுத்து, கோயிலுக்கு சுமார் 23 அடி உயரமுள்ள 2 டன் எடைகொண்ட அரிவாள் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். இந்த பிரம்மாண்ட அரிவாளை அப்பகுதி மக்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வியந்து வணங்கிச் செல்கின்றனர்.
இதுபோன்ற பிரம்மாண்ட அரிவாள், வேறு எந்த கோயில்களிலும் இல்லை என்பது இக்கோயிலுக்கு சிறப்பாகும்.