கிருஷ்ணகிரியில் மகாபாரத விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் : துரியோதனனை வதம் செய்யும் படுகளம் நிகழ்ச்சி - கிராம மக்கள் கண்டு ரசிப்பு
May 22 2018 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற மகாபாரத திருவிழாவின் போது, துரியோதனனை வதம் செய்யும் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரி கிராமத்தில் எழுத்தருளியுள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலின் மகாபாரத மகோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன், மலையூர் ஸ்ரீ கோபால்சாமி நாடக கழுவினரின் மகா பாரத தெருக்கூத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இதில் அம்மன் திருக்கல்யாணம், அரவான் கடபலி, கிருஷ்ணன் தூது, அர்சுனன் தபசு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த மகாபாரத விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான துரியோதனன் படுகளம் என்ற தெருக்கூத்து வெகு விமரிசையாக நடைபெற்றது. பாண்டவர்கள், கெளரவர்களை கூண்டோடு அழித்து விட்டு இறுதியில் துரியோதனனை படுகொலை செய்யும் நிகழ்ச்சி தான் துரியோதன படுகளம். இந்த இறுதி நிழ்ச்சியின் போது, துரியோதனனை பாண்டவர்கள் அழித்ததும், திரெளபதி அம்மையார் கூந்தல் முடியும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை முருக்கம் பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, மாதன குப்பம், வெண்ணாம்பள்ளி, ஜோடு கொத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான
மக்கள் கலந்துக் கொண்டு மகாபாரத நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.