ஸ்ரீரங்கம் கோயில் கருவறையில் காலணி வீசப்பட்ட சம்பவம் - நாட்டுக்கும், ஆட்சிக்கும் கேடு என ஜீயர் கருத்து
May 27 2018 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் கோயில் கருவறையில் காலணி வீசப்பட்ட சம்பவம் நாட்டுக்கும், ஆட்சிக்கும் கேடு தான் என மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்தவ சன்னியாசிகள் கோயிலுக்குள் நுழைந்ததும், அதனைத்தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் காலணியை வீசிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் சமூக விரோத சக்திகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த காலணி வீச்சு சம்பவம் நாட்டுக்கும், ஆட்சிக்கும் நல்லதல்ல என்றும் குறிப்பிட்டார்.