தூத்துக்குடி சிவன் கோயிலில் அகல் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபட இந்து சமய அறநிலையத்துறை திடீர் தடை
Jun 17 2018 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி சிவன் கோயிலில் அகல் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபட இந்து சமய அறநிலையத்துறை திடீர் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி சிவன் கோயிலில் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பெண்கள், தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால், தற்போது இந்து சமய அறநிலையத்துறை, இந்த வழிபாட்டுக்கு திடீர் தடை விதித்துள்ளது. மேலும், பக்தர்கள் அனைவரும் ஒரே மாட விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.