கரூரில் பண்டரிநாதன் கோவிலில் ஆசாட ஏகாதசி விழா : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Jul 23 2018 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் உள்ள பண்டரிநாதன் கோவிலில் ஆசாட ஏகாதசி விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள மூலவரின் பாதத்தை தொட்டு தரிசிக்கும் ஆசாட ஏகாதசி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூரில் உள்ள பழைமைவாய்ந்த பண்டரிநாதன் கோவிலில் மூலவரின் பாதத்தை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆசாட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு துக்காரம் கொடி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று நடைபெறும் மகோற்சவத்தில், பண்டரிநாதன் மூலவரின் பாதத்தை தொட்டு வணங்க பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. நாளை அதிகாலை 6 மணிக்கு அமராவதி ஆற்றில் பண்டரிநாதன் சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டதோடு அலங்கரிக்கப்பட்ட பூதேவி அம்மனுடன் உடைய உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பாரதி நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவிகருமாரி அம்மன் ஆலயத்தின் 18-ஆம் ஆண்டு ஆடி திருவிழா, தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வேண்டினர். அதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வேண்டி ஒருவார காலம் விரதம் இருந்து, காப்பு கட்டி தங்களது தலையில் கரகங்கள் சுமந்தும், கைகளில் தீச்சட்டிகளுடன் உடலில் அலகு குத்தி ஊர்வலமாக உலா சென்று பின்னர் கோவிலை அடைந்து தீ மிதித்தனர். இதனையடுத்து நாக தேவதையான கோவில் வளாகத்தில் நாளுக்கு நாள் இயற்க்கையாக வளர்ந்து வரும் நாக புற்றுக்கு சிறப்பு அலங்காரங்களும், வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.