சபரிமலையில் புனித தன்மையை காக்க தற்போது உள்ள விதிமுறையையே கடைப்பிடிக்க ஆதரவு : அகில உலக ஸ்ரீ தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பா மிஷன் கோரிக்கை
Jul 24 2018 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலையில் புனித தன்மையை காக்க தற்போது உள்ள விதிமுறையையே கடைப்பிடிக்க ஆதரவு தருமாறு அகில உலக ஸ்ரீ தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பா மிஷன் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஸ்ரீ ஐயப்பாமிஷனின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி ராஜமங்கலம், சபரிமலையில் ஸ்ரீ அய்யப்பன் நைஸ்டிக பிரம்மச்சாரியாய் யோக நிஷ்டையில் வீற்றிருப்பதால், இளம்பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், பழங்கால ஓலைச்சுவடிகளிலும் கோயிலின் வழிபாட்டு விதிமுறைகளை முன்னோர்கள் எழுதி வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறைகள் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், சபரிமலையின் புனிதத்தை காக்க தற்போது உள்ள விதிமுறையே கடைப்பிடிக்க ஆதரவு தருமாறு கூறினார். நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போதுள்ள விதிமுறைக்கு எதிராக இருந்தால், நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.