வேலூரில் 500 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுப்பு : விஜயநகர மன்னர் காலத்து சிலைகள் என அதிகாரிகள் தகவல்
Jul 26 2018 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் அருகே கோவில் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, 500 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம், மூஞ்சூர்பட்டு அருகே கோவில் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, சிவலிங்கம், துர்க்கையம்மன் மற்றும் பலிபீடம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. வேலூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். இந்த சிலைகள் 500 ஆண்டுகள் பழமையான, விஜயநகர மன்னர் காலத்து சிலைகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.