திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடைபாதை கடைகள் அகற்றம் : கோவில் நிர்வாக அலுவலகம் முற்றுகை - திங்கட்கிழமை வரை கடைகள் திறக்காமல் எதிர்ப்பு
Jul 26 2018 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் உள்ள நடைபாதைக் கடைகளை காவல் துறையினர் உதவியுடன் இன்று அகற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. இந்நிலையில் இந்த கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் நிர்வாகத்தினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் அகற்றி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் ஆலயத்திற்கு வந்தபோது, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், நடைபாதை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் இன்று முதல் இருந்து திங்கட்கிழமை வரை கடைகளை திறக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாக தெரிவித்தனர்.