மதுரையில் விமரிசையாக நடைபெற்ற அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு

Jul 27 2018 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆடித்தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்கள் முழங்க தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.

ஆடிமாதத்தினை முன்னிட்டு தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் மதுரை அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோவிலின் ஆடித்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க, கோவில் பிரகார வீதிகளில் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக சுந்தராஜ பெருமாளுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பண்பாட்டுத் திருவிழா போல நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பாதாக பாரம்பரிய வழக்கப்படி, பக்தர்கள் மாட்டுவண்டியில் வருகை புரிந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00