கரூர் கோவில் திருவிழாவில் தகராறு : சில குடும்பத்தாரை ஒதுக்கி விழா நடக்கவிடாமல் செய்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டு
Jul 31 2018 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், மக்களுக்கு எதிராக ஒரு தரப்பினர் செயல்படுவது குறித்து கேட்டால் மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
கரூர் மாவட்டம் நெரூரை அடுத்த அச்சமாபுரம் கிராமத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஊர் முக்கியஸ்தர் அந்த கிராமத்தில் உள்ள சில குடும்பங்களை மட்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு மற்ற குடும்பத்தாரை ஒதுக்கியும் திருவிழா நடக்கவிடாமல் செய்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.