ராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Aug 6 2018 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற மதநல்லிணக்க விழாவான சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா தர்ஹாவில் 844-ம் ஆண்டு உரூஸ் எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏர்வாடி தர்ஹாவுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் உரூஸ் எனப்படும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.