கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் புனித இன்னாசியார் ஆலய தேர்த் திருவிழா : ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்
Aug 14 2018 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில், 85 ஆண்டுகள் பழமையான புனித இன்னாசியார் ஆலயத்தில், நான்கு நாட்கள் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஜெர்மனி நாட்டின் போர்படை தளபதியாக இருந்த லோயாலோ இக்னேஷியஸ், ஓய்வு நாளில் பைபிள் படித்துக் கொண்டிருந்தபோது மனம் மாற்றம் ஏற்பட்டு, போர்படை தளபதி பணியை விட்டுவிட்டு, துறவறம் பூண்டு மக்களுக்காகவே சேவைகள் செய்து காலமானார். பின்னர், உலக கத்தோலிக்க போப்பாண்டவர் மூலம் லோயாலோ இக்னேஷியஸூக்கு புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது. அவரின் நினைவாக, கிருஷ்ணகிரி - பழைய பேட்டையில் 85 ஆண்டுகளுக்கு முன்பு, புனிதர் இன்னாசியார் பெயரால் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயம், கடந்த ஆண்டு புனரமைத்து கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில், புனித இன்னாசியார் தேர்த் திருவிழா கடந்த வெள்ளியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புனித இன்னாசியாரின் திருத்தேர், ஆலய வளாகத்திலிருந்து புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இந்த விழாவில், கிருஷ்ணகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம் மற்றும் சுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துக்கொண்டனர்.