72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 72 நாட்டிய மாணவிகள் தொடர்ந்து 72 மணி நேரம் பரதம் ஆடி உலக சாதனை
Aug 16 2018 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரத்தில் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 72 நாட்டிய மாணவிகள் தொடர்ந்து 72 மணி நேரம் பரதம் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.
72 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் கச்ச பேஸ்வரர் ஆலயத்தில் தனியார் நடன பள்ளி மாணவிகள் தொடர்ந்து 72 மணி நேரம் பரத நாட்டியம் ஆடி சாதனை புரிந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய இந்த சாதனை நிகழ்ச்சி இன்று காலை நிறைவுற்றது. இதில் 72 மாணவிகள் கலந்து கொண்டு, 72 முத்திரைகளில் நடனமாடினர்.
இந்த நடன நிகழ்ச்சி CHILDREN BOOK OF RECORDS-ல் உலக சாதனையாக பதிவு செய்யப்பட உள்ளது.