ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா : தங்க கருட வாகன சேவை - பக்தர்கள் தரிசனம்
Sep 18 2018 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, 5-ம் நாள் நிகழ்ச்சியாக தங்க கருட வாகன சேவை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 5-வது நாள் நிகழ்ச்சியாக, தங்க கருட வாகன சேவை நடைபெற்றது. கோயில் மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவில் மாட வீதிகளில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கருட சேவையைக் காண வரும் பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.