திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருத்தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர்வடம் பிடித்து தரிசனம்

Sep 20 2018 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர்வடம் பி‌டித்து தரிசித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோத்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை, கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேரை வடம்பிடித்த பக்தர்கள், கோவிந்தா ‍கோவிந்தா என பக்தி முழக்கங்களை எழுப்பியபடி, திருத்தே‌ரை வடம்பிடித்து இழுத்து தரிசி‌த்தனர். அப்போது மாடவீதிகளில் கூடியிருந்தவர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு, உப்பு, மிளகு மற்றும் சில்லரை நாணயங்கள் ஆகியவற்றை திருத்தேர் மீது வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த உற்சவங்களுக்கு திருவாபரண சமர்ப்பணம் நடைபெற்றது. தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளிய உற்றவர்களுக்கு தீப தூப நைவேத்தியங்கள் நடத்தப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00