திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தங்கதேர் 2 ஆண்டுகள் செயல்படவில்லை - கோவில் தெப்பகுளம் தூர்வாராமல் உள்ளது : முதன்மை நீதிபதி நஜிமாபானு
Sep 21 2018 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கதேர் 2ஆண்டுகளாக செயல்படாத நிலையில் உள்ளதாகவும், கோவில் தெப்பகுளம் தூர்வாராமல் இருப்பதாக முதன்மை நீதிபதி நஜிமாபானு தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று மதுரை மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதிகள் சத்யமூர்த்தி, நஜிமா பானு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கோவிலில், கட்டிட்டத்தின் அமைப்பு, உறுதி தன்மை மற்றும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், கட்டண விபரங்கள், பிரசாதம், தெப்பகுளம், அன்னதானகூடம் மற்றும் வரவு செலவு தணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு பக்தர்களை சந்தித்து வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதன்மை நீதிபதி நஜிமா பானு, திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கதேர் 2 ஆண்டுகளாக செயல்படாத நிலையில் உள்ளது என்றும், கோவில் தெப்பகுளம் தூர்வாராமல் இருப்பதாக தெரிவித்தார்.