திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா : தங்கத்தேரில் மலையப்பசுவாமி வீதி உலா - திரளான பக்தர்கள் தரிசனம்
Oct 17 2018 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று, தங்கத் தேரில் மலையப்ப சுவாமியின் வீதி உலாவை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று, ஸ்ரீ தேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் தங்கத் தேரோட்டம் கோயில் மாட வீதிகளில் நடைபெற்றது. தங்கத் தேரில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு தூப தீப நெய்வேத்யம் நடத்தப்பட்டநிலையில், பெண்கள் வடம்பிடிக்க, மலையப்ப சுவாமியின் தங்கத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் நவராத்திரி விழா உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. 7ம் நாளான நேற்று தாயார் திருவடி சேவை நடைபெற்றது. வருடத்திற்கு ஒருமுறைமட்டுமே தாயார் திருவடியை காணமுடியும். இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தாயாரின் திருவடி சேவையை தரிசித்தனர்.