சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி தூத்துக்குடியில் ஐயப்ப பக்தர்கள் ஊர்வலம்
Oct 17 2018 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி, தூத்துக்குடியில் ஐயப்ப பக்தர்கள் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் கேரள பந்தள மகாராஜா பங்கேற்றார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை மறுசீராய்வு செய்யக்கோரி நாடு முழுவதும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலத்தில், கேரள பந்தள அரண்மனை வர்மராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வர்மராஜா, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய அரண்மனை சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பந்தள அரண்மனை மூலம் சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு செய்யப்படும் எந்த விதமான பூஜைகளும் தடைபடாது என்றும் தெரிவித்தார்.