திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் : தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

Oct 18 2018 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நடைபெற்ற தீர்த்தவாரியில், பல்லாயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று காலை கோவில் தெப்பக்குளமான சுவாமி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் தீர்த்தவாரி நடைபெற்றது.

சக்கர ஸ்நானத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக கோவில் தெப்பக்குளத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு ஆகம முறைப்படி திருமஞ்சனம் உள்ளிட்ட வைதீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தேவஸ்தான அர்ச்சகர்கள் சக்கரத்தாழ்வாரை கோவில் தெப்பக் குளத்திற்கு எடுத்து சென்று மூன்று முறை தண்ணீரில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தினர்.

அப்போது குளத்தின் நான்கு புறங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கம் எழப்பியபடி புனித நீராடினர். தொடர்ந்து உற்சவர்கள் மாட விதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.

சக்கர ஸ்நானத்துடன் ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரமோற்சவம் நிறைவடைந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00