திருவாரூர் கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் ஆயுத பூஜை - சிறப்பு வழிபாடு : குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி தொடக்கம்

Oct 18 2018 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில், நடைபெற்ற ஆயுத பூஜை வழிபாட்டில்​நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கல்வி கடவுளான சரஸ்வதிக்கென நாட்டிலேயே, திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் மட்டுமே ஆலயம் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தர் கவிபாடி புகழ்பெற்றதால், புண்ணிய பூமியாக கூத்தனூர் திகழ்கிறது.

இந்த ஆலயத்தில், ஆயுதபூஜையை யொட்டி, சிறப்பு அபி‍ஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சரஸ்வதி அம்மனை வழிபட்டனர்.

இந்த ஆலயத்தில், பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயிலும் கல்வியில் மேன்மை அடையவேண்டி, கோயிலில் ஆங்காங்கே அமர்ந்து பாடபுத்தகங்களை படித்தும், எழுதியும் பிரார்தனையில் ஈடுபட்டனர். இது தவிர குழந்தைகளின் கையை பிடித்து அவர்களது பெற்றோர்கள் தமிழ்மொழியின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை நெல்தானியத்தில் எழுதி கல்வி‌யை தொடங்கிவைத்தனர்.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தூத்துக்குடி சிதம்பரநகர் விநாயகர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி சன்னதியில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00