சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற 52 வயது பெண்ணை தடுத்து நிறுத்தி போராட்டம் : 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

Nov 8 2018 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் தரிசனத்திற்காகச் சென்ற 52 வயது பெண்ணை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது போலீசார் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த 5-ம் தேதி சிறப்பு பூஜைகளுக்‍காக கோயில் நடை திறக்‍கப்பட்டது. திருச்சூரை சேர்ந்த லலிதா ரவி என்ற 52 வயது பெண்மணி, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சபரிமலைக்‍கு வந்தபோது, அங்கு கூடியிருந்த பக்‍தர்கள் லலிதாவை சுற்றிவளைத்து, அவரை கோயிலுக்‍குள் அனுமதிக்‍க மறுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார், ஆதார் அட்டையை ஆய்வு செய்த பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ள்துள்ளனர். லலிதா மீது தாக்குதல் நடத்திய 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சபரிமலையில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்காணிக்‍கும் வகையில் சிறப்பு அதிகாரியாக பிரேம்குமார் ஐஏஎஸ் நியமிக்‍கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00