திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா -அபிஷேக கட்டணம், தரிசனக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவதி
Nov 9 2018 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், அபிஷேக கட்டணம், தரிசனக் கட்டணம் ஆகியவவை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 6 நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அபிஷேக கட்டணம், தரிசன கட்டணம் ஆகியவை கடந்த ஆண்டைவிட பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கந்த சஷ்டியின்போது 100 ரூபாயாக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் தற்போது 2 ஆயிரம் ரூபாயாகவும்,
200 ரூபாயாக இருந்த அபிஷேக கட்டணம் 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. யாகசாலை பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களிடம் 3 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த திடீர் கட்டண உயர்வு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.