மகர விளக்கு சீசனில் சபரிமலைக்கு செல்ல 539 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியீடு
Nov 9 2018 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகர விளக்கு சீசனில் சபரிமலைக்கு செல்ல 10-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட 539 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் குவியும் கட்டுக் கடங்காத பக்தர்கள் கூட்டத்தை வரைமுறைப் படுத்த கேரள போலீசார் சார்பாக, ஆன்லைன் முன்பதிவு திட்டம் அமலில் உள்ளது. அதன்படி, sabarimala.com என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்கள் விருப்பப்படி தேதியையும், நேரத்தையும் முன்பதிவு செய்து, அந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு எழுந்துள்ளதுடன், பாரம்பரிய முறையையே பின்பற்ற ஏராளமான பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மகர விளக்கு சீசனில் சபரிமலை செல்ல மொத்தம் 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதில், 10லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட 539 பெண்களும் முன்பதிவு செய்துள்ளனர்.