திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா : தெம்மாங்கு பாட்டு பாடி நடனம் ஆடி பக்தர்கள் விரதம்
Nov 12 2018 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, தெம்மாங்கு பாட்டு பாடி நடனம் ஆடி பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
முருகக் கடவுளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில், கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோயில் வளாகத்தில் தங்கி, 6 நாட்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை, திண்டுக்கல், பழனி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், முருகன் புகழ் கூறும் தெம்மாங்கு பாடல்களை பாடி, இசைக்கு ஏற்ப நடனமாடி விரதம் இருந்து வருகின்றனர்.