சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு, இடைக்கால தடை கோரி தொடரப்பட்ட வழக்‍கை விசாரிக்‍க, உச்சநீதிமன்றம் மறுப்பு - ஜனவரி 22ம் தேதி வரை, எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் திட்டவட்டம்.

Nov 14 2018 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு, இடைக்கால தடை கோரி தொடரப்பட்ட வழக்‍கை விசாரிக்‍க, உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜனவரி 22ம் தேதி வரை, அந்த தீர்ப்பின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்‍கள் மீது, வரும் ஜனவரி 22ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு நேற்று அறிவித்தது. மேலும், ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்‍கு தடை விதிக்‍க முடியாது என்றும் தெரிவிக்‍கப்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு, இடைக்கால தடை கோரி, உச்சநீதிமன்றத்தில், வழக்‍கறிஞர் ஒருவர் இன்று மனு தாக்‍கல் செய்தார். ஆனால், சீராய்வு மனுக்‍கள் மீதான விசாரணை, ஜனவரி 22க்‍கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளதால், அதுவரை, இந்த வழக்‍கில் எந்த உத்தரவும் பிறப்பிக்‍க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00