நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம் : சிவாலயங்களில் திருக்கல்யாணம்
Nov 14 2018 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான சிவாலயங்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மயூரநாதர் , வதான்யேஸ்வரர், படித்துறை விஸ்வநாதர், அய்யாரப்பர் , காசி விஸ்நாதர் ஆலயங்களில் கடந்த 8ம் தேதி, காவிரி துலா உற்சவ விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயூரநாதர் - அவையாம்பாள் திருக்கல்யாணம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. மயூரநாதர், அவையாம்பிகையுடன், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
இதுபோல் வதான்யேஸ்வரர் ஆலய திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.