திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி சீட்டை பிரித்துக் கொள்வதில், அமைச்சர் - எடப்பாடி அணி நிர்வாகி இடையே தள்ளுமுள்ளு - பக்தர்கள் கடும் அதிருப்தி
Nov 22 2018 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு, முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதிச் சீட்டை பிரித்துக் கொள்வதில், அமைச்சருக்கும், எடப்பாடி அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அன்று அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. தீபத்திருவிழாவை காண்பதற்கு அறநிலையத்துறை சார்பில் முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி பாஸ் வழங்குவதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரனுக்கும், எடப்பாடி அணியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் கே.ராஜனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைக் கண்ட கோயில் ஊழியர்களும், பக்தர்களும் அதிருப்தி அடைந்தனர். அதிகார துஷ்பிரயோகம் செய்து, சுமார் 10 ஆயிரம் விஐபி பாஸ்களை, அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சியினர் பிரித்துக் கொண்டு சென்றது, பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது.