சென்னை பாரிமுனையில், உலக நன்மைக்காக ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் யாகம் : டிச. 6 வரை மஹாகாளி ப்ரத்யங்கிராதேவிக்கு யாகம்
Nov 29 2018 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயிலில் உலக நன்மைக்காகவும், தமிழகத்தை இயற்கை பாதிப்புகளிலிருந்து பாதுகாத்திடவும் மஹாகாளி ப்ரத்யங்கிராதேவிக்கு யாக வேள்வி கடந்த 25ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. வரும் 6ம் தேதி வரை காலை, மாலை இரண்டு வேளையும் யாகசாலையில், ப்ரத்யங்கிராஸ்திர மந்த்ர ஜபம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.