மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவ விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Dec 7 2018 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமைந்துள்ளது. கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, இக்‍கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்‍குப் பின்னர், அம்மனுக்‍கு பட்டுச் சேலை உடுத்தப்பட்டது. பின்னர், நகை அலங்காரத்துடன் அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

தாலாட்டு மண்டபத்தில் உள்ள தங்க ஊஞ்சலில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அமர வைக்கப்பட்டு தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00