சபரிமலை விவகாரம் - தீர்ப்பை மாற்றி அமைக்க வலியுறுத்தல் : ஐயப்ப சேவா சங்கம் சார்பில் தீபம் ஏற்றி வழிபாடு
Dec 27 2018 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் 34-வது ஆண்டு மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு 10அடி உயரத்தில், பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டு, சுவாமி ஐய்யப்பன் எழுந்தருளினார். தொடர்ந்து, படிக்கு பழங்கள், புத்தாடை வைத்து, ஐதீக முறைப்படி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து படி பூஜை நடைபெற்றது. ஐயப்பனுக்கு மஹாதீபாராதனை செய்யப்பட்டது. 108 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில், உலக நன்மை வேண்டியும், நல்ல மழை வேண்டி பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன. அதையொட்டி, சுவாமி ஐயப்பன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் ஆயிரத்து எட்டு குத்து விளக்கு பூஜை ஐயப்பன் ஆலயம் முன் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் நேற்று தீப ஊர்வலம் நடைபெற்றது. திருக்காமேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த தீப ஊர்வலம் நான்கு மாட வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.