ஐயப்பன் கோயிலில் மேலும் ஒரு பெண் பக்‍தர் தரிசனம் - சபரிமலை சன்னிதானத்தில் மீண்டும் பரபரப்பு

Jan 4 2019 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை சன்னிதானத்தில் ஏற்கெனவே இரண்டு பெண் பக்‍தர்கள் தரிசனம் செய்த நிலையில், இன்று இலங்கையைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் பக்‍தர் தரிசனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. ஆனாலும், அங்கு அனைத்து வயது பெண்களும் வழிபட எதிர்ப்புத் தெரிவித்து இந்து மத அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதனை மீறி நேற்று முன்தினம் 40 வயதுக்‍கும் மேற்பட்ட இரண்டு பெண்கள் தரிசனம் செய்தனர். இதற்கு எதிராக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று இலங்கையைச் சேர்ந்த 46 வயது பெண் பக்‍தர் ஒருவர் தரிசனம் செய்தார். எனினும், 18 படிகளில் ஏற தனக்‍கு அனுமதி அளிக்‍கப்படவில்லை என்றும், தனது உடல் தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ்களை கொண்டு சென்றதாகவும் அவர் கூறினார். இலங்கை பெண்ணின் இந்த வழிபாட்டு நிகழ்வு கேரளாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00