ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
Jan 9 2019 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் எண்னைக் காப்பு விழாவின் முதல் நாள் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
மார்கழி மாதம், ஆண்டாள் பாவை நோன்பு இருப்பதற்கு தோழிகளுடன் திருமுக்குளத்தில் நீராட சென்றதனை நினைவுகூறும் வகையில், எண்ணைக் காப்பு மார்கழி நீராட்டு உற்சவம் ஆண்டு தோறும் திருமுக்குளம் அருகில் உள்ள எண்ணைக்காப்பு மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நேற்று மாலை எண்ணைக் காப்பு உற்சவம் தொடங்கியது. இந்நிகழ்ச்சி வரும் 15-ஆம் தேதி வரை தினம் தோறும் நடைபெறும். நேற்று உற்சவர் ஆண்டாள் அலங்கரிக்கப்பட்டு, சன்னதியில் இருந்து புறப்பட்டு மாட வீதிகளில் வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீஆண்டாள் எண்ணைக் காப்பு மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு 365 விதமான மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட தைலக் காப்பு தங்க குடத்தில் ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்பட்டு மஞ்சள் நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த உற்சவத்தை காண உள்ளூர், மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்தனர்.