காணும் பொங்கலை முன்னிட்டு திருப்பதியில் வேடுபறி உற்சவம் : திரளான பக்தர்கள் வழிபாடு
Jan 17 2019 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காணும் பொங்கலை முன்னிட்டு, திருப்பதியில் வேடுபறி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வேடு பறி உற்சவத்தை முன்னிட்டு உற்சவர்களான மலையப்பசுவாமி, கிருஷ்ணர், உற்சவமூர்த்திகள் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி ஏழுமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக சென்று பாபவிநாசம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாரி வேட்டை மண்டபத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து உற்சவர் மலையப்ப சுவாமி பஞ்ச ஆயுதங்களை தாங்கியவராக பல்லக்கில் எழுந்தருள வேடுபறி உற்சவம் நடத்தப்பட்டது. அப்போது ஏழுமலையான் சார்பில் கோவில் அர்ச்சகர் வெள்ளி வேல் ஒன்றை மூன்று முறை வனப்பகுதியில் நோக்கி வீசி எறிந்து சம்பிரதாய முறைப்படி வேடுபறி உற்சவம் நடத்தினார். வேடுபறி உற்சவம் நிறைவடைந்த பின்னர் உற்சவமூர்த்திகள் ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான உயர் அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.