பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள்
Jan 21 2019 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத முத்து குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, நேற்று அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத முத்து குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பொற்சுண்ணம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு அபிஷேகமும், சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. மங்கலநாணுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மேளதாளம் முழங்க வேதவிற்பன்னர்கள் மந்திரம் ஓத, மங்கலநாண் அணிவித்தல் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, தம்பதி சமேதர் முத்துக்குமார சுவாமி, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, பெரிய வெள்ளித்தேரில் எழுந்தருள, நான்கு ரதவீதிகள் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தைபூசத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருகின்றனர். மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டும், பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தைப்பூசத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுபடுத்தப் பட்டுள்ளனர்.