சபரிமலை விவகாரம் - கேரள அரசு புதிய ஆய்வறிக்கை : 50 வயதுக்கு உட்பட்ட 17 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்தனர்

Jan 24 2019 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில், 50 வயதுக்‍கு உட்பட்ட 17 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக புதிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, பல்வேறு எதிர்ப்புகளுக்‍கு இடையே கேரள அரசு நடைமுறைப்படுத்தியது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்‍கை தாக்கல் செய்த அம்மாநில அரசு, 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக கூறியது. அவர்களின் பெயர் மற்றும் ஆதார் விவரங்களையும் பட்டியலில் குறிப்பிட்டது.

இந்த பட்டியல் வெளியானதும் அதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சில ஆண்களின் பெயர்களும் பட்டியலில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியை கண்டறிந்து, புதிய பட்டியலை தயாரித்துள்ள கேரள அரசு, 50 வயதுக்‍கு உட்பட்ட 17 பெண்கள் மட்டுமே சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்ததாக தெரிவித்துள்ளது. இந்த புதிய பட்டியல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00