திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் மாயமான விவகாரம் - கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை
Feb 4 2019 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் மாயமான விவகாரம் தொடர்பாக கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், இருந்து ஆயிரத்து 300 கிராம் எடையுள்ள மூன்று தங்க கிரீடங்களும் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தேவஸ்தானத்தை சேர்ந்த கண்காணிப்புக் குழுவினரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சந்தேகப்படும் வகையில் உள்ள கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணதேவராயர், இந்த தங்க கிரீடங்களை கோவிலுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.