நாகூர் தர்கா கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : முக்கிய வீதிகள் வழியே கொடி ஊர்வலம்
Feb 7 2019 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 462ம் ஆண்டு கந்தூரிப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகப்பட்டினம் மீராப்பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் நடைபெற்றது. கண்ணாடி ரதம், டீஸ்டா கப்பல், செட்டிப்பல்லக்கு, பீங்கான் ரதம், முத்துப்பல்லக்கு உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட ஐந்து ரதங்களில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட கொடிகள் ஏற்றப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே நாகூருக்கு கொடி ஊர்வலம் வந்தடைந்தது. தாரை தப்பட்டையுடன் நடைபெற்ற கொடி ஊர்வலம் வரும் வழியில் பொதுமக்கள் மலர்களை தூவி சாதி, சமய வேறுபாடின்றி வழிபாடு செய்தனர். நாகூர் அலங்கார வாசலில் கொடி ஊர்வலம் நிறைவடைந்தது. சிறப்பு தொழுகைக்கு பின்பு, தர்காவின் 5 மனோராக்கள் மீது ஒரே நேரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது வண்ணமிகு வாண வேடிக்கைகள் நடைபெற்றன.