மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உடலில் கத்தி போடும் நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா
May 28 2019 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உடலில் கத்தி போடும் நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது இ.கோட்டைப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவிலின் வைகாசித்திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று உடலில் கத்தி போடும் நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடைபெற்றுது. கிராமத்தில் நோய் நொடியின்றி மக்கள் வாழவும் வருடா வருடம் கத்தி போடும் திருவிழாவை நடத்துவதாகவும், இதுவரை யாருக்கும் சிறு காயம் கூட ஏற்பட்டதில்லை எனவும் கிராம மக்கள் கூறினர். இத்திருவிழாவில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.