திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவிலில் படுகளம் திருவிழா : பூதங்களுக்கு திருமணம் செய்யும் விநோத நிகழ்ச்சி
May 29 2019 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கோவிலில் நடைபெற்ற படுகளம் திருவிழாவில் பூதங்களுக்கு திருமணம் செய்யும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பட்டியில் கோயில் நிகழ்ச்சியை யொட்டி 9 கிராம மக்கள் இணைந்து நடத்திய படுகளம் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. சின்னமணப்பட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண், பெண் பூதங்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காட்டுப்பகுதி வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற படுகளம் நிகழ்ச்சியில் இராணுவ வீரர்கள் ஆதிவாசிகள் சிவன் -பார்வதி, ரோபோ உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் இளைஞர்கள் ஆடிப்பாடி தங்களின் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வந்தனர். திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.