காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் அத்தி வரதர் - தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Jul 1 2019 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் பக்தர்களுக்கு இன்று காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
உலக பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் விக்ரகம், பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், கடந்த 1979-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டு, அனந்த சரஸ் குளத்திலிருந்து அத்திவரதர் விக்ரகம் வெளியே எடுக்கப்பட்டு, இன்று முதல் 48 நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது. இன்று காலை 5.00 மணி அளவில் அத்திவரதர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.