அய்யா வைகுண்ட தர்மபுரி கோவிலில் ஆனி திருவிழா : ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம்
Jul 1 2019 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபுரி கோவிலின் ஆனி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் அடுத்த மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆனி மாத திருவிழாவையொட்டி, தர்ம பெட்டக தர்மவான்களுக்கு பரிவட்ட பரிவர்த்தனை விழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஐயா வைகுண்டரை மலர்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க பல்லக்கில் வைத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர். அய்யாவின் திரு நடையில் உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, பணிவிடை நிறைவுபெற்று தர்மவான்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அய்யா வைகுண்டரை தரிசனம் செய்து வழிபட்டனர்.