காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதரை, தரிசிக்‍க இன்று முதல் 50 ரூபாய் - கட்டண சேவை ரத்து - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Jul 2 2019 7:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிப்பதற்கான 50 ரூபாய் கட்டண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ம் ஆண்டுக்கு பிறகு இந்நிகழ்வு நேற்று நடைபெற்றது. அத்திவரதரை தரிசிக்‍க தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளார்கள். இதனால் காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்ய தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இலவச தரிசனம், 50 ரூபாய் கட்டண வரிசை, 500 ரூபாக்கான தரிசனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கான சிறப்பு வழி அமைக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய வசூலிக்கப்பட்ட 50 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னையா அறிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00