ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயிலில் புகழ்பெற்ற ரத யாத்திரை கோலாகல தொடக்கம் : குவியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
Jul 4 2019 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயிலில் புகழ்பெற்ற ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலம், பூரி ஜெகந்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த யாத்திரை இன்று தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரத யாத்திரையை முன்னிட்டு தேர்கள் சிறப்புற அலங்கரிக்கப்பட்டுள்ளன. விழாவில் உள்ளூரில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.