ரோஜாப்பூ நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர் - 8வது நாளாக இன்றும் குவியும் பக்தர்கள்
Jul 8 2019 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் அத்திவரதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ரோஜா நிற பட்டாடை உடுத்தி அத்திவரதர் எழுந்தருளியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 8வது நாளான இன்றும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். ரோஜாப்பூ நிற பட்டாடை உடுத்தி அத்திவரதர் காட்சியளித்து வருகிறார்.