ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் 18-ம் நாளில் அத்திவரதரை காண அலைமோதும் பக்தர்கள் : வண்ண மலர் அலங்காரத்தில் காட்சிதரும் அத்திவரதர்
Jul 19 2019 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், 18-வது நாளாக இன்றும் அத்திவரதரை ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று ஊதாநிற பட்டாடையில், மலர் அலங்காரங்களுடன் அத்திவரதர் காட்சியளிக்கிறார்.
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம், கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல வண்ண மலர்கள் மற்றும் பட்டாடைகளில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில், 18-வது நாளாக இன்றும், அத்திவரதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஊதா நிற பட்டாடையில் அருள்பாலித்து வரும் அத்திவரதரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.