இந்திய கலாச்சாரத்தை விளக்கும் பரத நாட்டியம் : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் பரத நாட்டியம்
Jul 22 2019 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில், நதிகளின் பெருமை, இந்திய கலாச்சாரம் குறித்து விளக்கும் மாணவிகளின் பரத நாட்டியம், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கும்பகோணம் ஆடல்வல்லான் நாட்டியலயா பள்ளியில் பரதம் பயின்று முதன் முறையாக அரங்கேற்றம் காணும் மாணவிகளுக்கு சலங்கை அணிவிக்கும் விழா நடைபெற்றது. கங்கை, நர்மதா, உள்ளிட்ட நதிகளின் பெருமையை வெளிப்படுத்தும் அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைந்த பரதநாட்டியம், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மேலும், இந்திய கலாச்சாரம், விவசாயம் மற்றும் வருங்கால தலைமுறைகள் காக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, மாணவிகள் ஆடிய பரத நாட்டியம் மிகவும் ரசிக்க வைத்தது.